Wednesday 30 July 2014

பிரிவு

கண்விழித்ததும் கலைந்திடும்
கனவல்ல என் காதல்

கண்ணீராய் கரைந்திடும்
கவலையுமல்ல  என்  காதல்

கண்வழி புகுந்து கருத்து ஒருமித்து
வந்ததல்ல என் காதல்

 காமம் தலைக்கேறி (அதனை) கழிக்க
 கனிந்ததல்ல என் காதல்

நம்மை காலம் சேர்த்தது
இது பிரியும் காலமென்றால்
அதை ஏற்பதும் முறையே!


Wednesday 9 April 2014

விடியல்

அதிகாலை வேளையிலே இருள் சூழ்ந்திருக்க 
மதியும் வெள்ளியும் விடுமுறைக்கு சென்றிருக்க 

பொதியும் கால்கள் மணலிலே திணறிட    - என் 

மதியும் சோர்வுற்று உறங்கிடும் வேளையிலே 

நதியருகே மின்னலென மின்மினிகள் கண்டதும் 

உதித்திடும் ஆதவன் கிழக்கே சற்றுநேரத்தில் (என்றே) 

உதித்தது நம்பிக்கைகதிர்கள் என்னுள்ளே -அதனை

விதைத்தது மின்மினியின் சிறு ஒளி அன்றோ !

Sunday 29 December 2013

சிறகடித்து வா

காலம் இன்னும் கடக்கவும் இல்லை

கடமையில் நீ என்றும் தவறவுமில்லை-நீ

கடந்திடும் பாதையில் இனி தடையுமில்லை

கலங்கிட வாழ்வில் குறை வந்திடினும்- உன்

திறத்தினில் நீ குறைவதுமில்லை

கட்டுத்தளை எறிந்து  சிறகடித்து வா வசந்தம் தூரமில்லை ...,

Wednesday 25 December 2013

வஞ்சியெனை வஞ்சியாதே

பஞ்சணையை  வெறுத்து உன் 

நெஞ்சணையை  நினைத்து 

அஞ்சனம்   இளைத்து 

கொஞ்செனை என மொழிந்து நின்ற 

வஞ்சிஎனை கஞ்சி(கருமி)  என்றாய் 

அஞ்சிநின்றவளை கொஞ்சினேன் உனை என்றாய்

விஞ்சி நின்ற அன்பினில் வஞ்சியும் உன்

கெஞ்சு மொழி உணர்ந்து

தஞ்செமென சாய்ந்தாள் 

துஞ்சிட தோள் தருவாய் 

பஞ்சென இவள் துயர் பறக்க...,


Monday 5 August 2013

வாலி

காதல் கவிதைகளில் கிறங்கச் செய்தாய்
தாலாட்டும் பாடலால் உறங்கச் செய்தாய்
கருணைப் பண்ணால் இரங்கச் செய்தாய்
இரங்கற்ப்பா பாட மனமில்லை ஐய்யா
 ஸ்ரீரங்கம் கண்ட பேரங்கன் உ மக்கு 

Saturday 3 August 2013

வாலிப கவிஞர் வாலி

உலகம் சுற்றாத 'வாலி'பன் - என்றும் 
உலகை சுற்றும் 'வாலி' பண் (pun) 

Friday 12 July 2013

செந்தமிழ்தேன்மொழியாள்(ல்)

உனது அங்கங்கள் அழகிய
தமிழ் சங்கங்கள்
உயிரெழுத்து தமிழுக்கு உன்
உயிரால் எழுது எந்தனக்கு
மெய்யெழுத்து மென்மைக்கு உன்
மெய்யால் எழுது ஆண்மைக்கு
உயிர்மெய் கலந்ததால் உதிக்கும்
உன்னத எழுத்துக்கள் - நம்
உயிர்மெய் கலந்ததை
பிரபஞ்சத்தில் எழுதுங்கள்
என்றுரைத்தாய் அழுத்தமாய்
ஆய்த எழுத்து செவ்வாயால்
ஆய்ந்து எழுதியும் என் மார்பில்
காயங்கள் ஏற்படாத மாயங்கள்
தான் என்னவோ ?!

கொற்றவனை கொஞ்சுமுன்
மொழியால் உனக்கு
உற்றவனாக்கி நிறைய
கற்றவனென்ற மமதையை
அழித்து ஆணவம் ஏதும்
அற்றவனாக்கி விட்டாய்
பற்றற்று இருக்க துணிந்தவனை
அனைத்தையும் பெற்றவனாக்கி
விட்டாய் !